லெப்.கேணல் சங்கர் (தமிழீழத்தின் முதல்வித்து)

சங்கர் உனக்கு சாவோர் முடிவே
எங்களுக் கோ நின் சாவு தான் தொடக்கம் !

கண்கள் மூடிய களத்தின் முதற்புலி
உந்தன் வழி எங்கள் உயிர்வழி ஆனது !

பாவிகள் தமிழன் உயிரை பறித்தநாள்
சாவினைத் தடுக்க சாவினை ஏற்றாய் !

விழுவோ ருக்காய் அழுவோர் மண்ணில்
அழுவோருக்காய் வீழ்ந்தோய் - பார்த்தோம் !

தழைக்க ஓங்கித் தமிழீழ பொழில்
முளைக்க நீயே முதல் விதை ஆனாய் !

எங்கள் மண் உன் சாவில் உயிர்க்கும்
எங்கள் வாழ்வுன் உதிர்வில் பூக்கும்.!

-காசி ஆனந்தன்

கருத்துகள் இல்லை

தீம் படங்களை வழங்கியவர்: follow777. Blogger இயக்குவது.